மதுரை பெருங்குடியில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் இன்று
(01.09.2017) முப்பெரும் விழா இனிதே நிறைவு பெற்றது. தேவராட்டமும் சிலம்பாட்டமும்
பயிற்சியளித்தோம். என்னுடன் மாணவர்களுக்கு தேவராட்டம் பயிற்சியளிக்க உதவியாக இருந்த
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ், உறுமி கலைஞர் குமரேசன் ஆகியோர்களுக்கும், சிலம்பம்
பயிற்சியளித்து உதவிய செல்லுர் முத்து அவர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். தொடர்ந்து
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டுப்புற கலைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி
அவர்களின் தனித்திறனை அங்கீகரித்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய
ஞான செல்வம் அவர்களுக்கும், ஆசிரியை சகோதரி பெமிலா அவர்களுக்கும் மிக்க நன்றி
தெரிவிக்கிறேன். * சே தமிழ்
படங்கள் :
No comments:
Post a Comment